சென்னை: கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவரும் இன்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் மொபைல் போன்களையும் ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மக்களின் ஒற்றுமையை காட்டுவதற்காகவும் இருள் சூழ்ந்த நாட்டில் ஒளியை பரப்புவதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்று இரவு ஒன்பது மணிக்கு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஒளிரவிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டார். இதில் அனைவரின் எதிர்பார்ப்பு. திமுக தலைவர் ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான்.