கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மக்களின் ஒற்றுமையை காட்டுவதற்காகவும் இருள் சூழ்ந்த நாட்டில் ஒளியை பரப்புவதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்று இரவு ஒன்பது மணிக்கு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஒளிரவிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டார். இதில் அனைவரின் எதிர்பார்ப்பு. திமுக தலைவர் ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக திமுக தலைவர்களுக்கும் மற்றும் சில எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இந்துமத சடங்குகளின் மீது நம்பிக்கை கிடையாது. எப்போதும் நையாண்டி செய்து கொண்டிருப்பர். கொரோனா விஷயத்தில் மோடியின் வேண்டுகோளை இவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக எடுத்த எடுப்பிலேயே ஊரடங்கு பின்பற்றப்பட வேண்டும் என அறிவித்தார் மோடி. இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாட்டில் ஊரடங்கை அறிவித்து அதை வெற்றிகரமாக மக்களை பின்பற்ற வைத்ததற்கு மோடியை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஆச்சரியம் தெரிவிக்கின்றன.